10/07/2012

மனிதத்தை மறக்க பழகுகிறேன்.


மதிப்பெண்களுக்காக வதைக்கப்படும் மாணவர்கள்

…சக்கையாய் பிழியப்படும் சுரங்க பணியாளர்கள்

…தர்மம் அய்யா என அடிவயிற்றில் இருந்து கதறும் பிச்சைக்காரன்

…சாலையில் கிடக்கும் அடிபட்ட மனிதன்

…இறைச்சிக்காக கொல்லப்படும் பசுக்களின் கதறல்

…அந்த மூன்று நாட்களிலும் ஓய்வின்றி உழைக்கும் பெண்கள்

…வேலைக்காரியிடம் குழந்தை - கழிப்பறையிலே தாய்ப்பால் என வேதனையுடன் பணி செய்யும் பெண்கள்

…இந்த ரணங்களில் இருந்து விடுபட
…மற்றவர்களைப் போல் நானும்
…மனிதத்தை மறக்க பழகுகிறேன்.

No comments:

Post a Comment