மதிப்பெண்களுக்காக வதைக்கப்படும் மாணவர்கள்
சக்கையாய் பிழியப்படும் சுரங்க பணியாளர்கள்
தர்மம் அய்யா என அடிவயிற்றில் இருந்து கதறும் பிச்சைக்காரன்
சாலையில் கிடக்கும் அடிபட்ட மனிதன்
இறைச்சிக்காக கொல்லப்படும் பசுக்களின் கதறல்
அந்த மூன்று நாட்களிலும் ஓய்வின்றி உழைக்கும் பெண்கள்
வேலைக்காரியிடம் குழந்தை - கழிப்பறையிலே தாய்ப்பால் என வேதனையுடன் பணி செய்யும் பெண்கள்
இந்த ரணங்களில் இருந்து விடுபட
மற்றவர்களைப் போல் நானும்
மனிதத்தை மறக்க பழகுகிறேன்.
No comments:
Post a Comment