10/07/2012

காத்திருப்பேன் இன்னுமொரு நாள்...



* அது ஒரு அந்திப்பொழுது...

* கண்களில் படபடப்பு
  நாசியில் குறுகுறுப்பு

* இரண்டொரு நிமிடம் எனினும்
  யுகங்கள் கடந்த எண்ணம்

* அவள் விரல்களிடையில் ஓய்வை
  விரும்பும் எனது விரல்கள்

* அவள் கால் தடங்களில் எல்லாம்
  கால் பதிக்க துடிக்கும் இதயம்

* மனசுக்குள் மின்சாரம்
  கால்களுக்கு கீழ் ஆகாயம்

* அழகாய் நடந்து வந்தாள்
  ஆனந்தத்தின் எல்லை தந்தாள்

* அவள் பார்வை பட்டதும்
  உணர் விழந்தேன் இயற்கையாய்

* மரத்தின் அடியில்
  மரமாய் நின்றேன்

* கருதியது கூறும் முன்
  கடந்து சென்று விட்டாள்

* கவிதைகள் வடித்தும்
  கவிஞன் ஆகா நான்....
  அவள் பார்வை பட்டும்
  அமரன் ஆகா நான்.....
  காத்திருப்பேன் இன்னுமொரு நாள்
  என் காதலை சொல்ல.

No comments:

Post a Comment