25/09/2012

உன் புராணம் - 2

* புரிந்தது எனக்கு
   காதல் புரியாது என.

* நீ கோவிலை சுற்றினாய்
    நானோ!? உன்னை.

*  உன் கொலுசுகளுக்கு ஏன் இந்த மகிழ்ச்சி?
    உன்னுடனேயே இருப்பதாலோ!!!

* வஞ்சம் வைத்துள்ளேன்
   உன் புத்தகங்கள் மீது
   என்னை பற்ற வேண்டிய கரங்கள்
   அவைகளை பற்றியிருப்பதால்.

* உன்னைப் பற்றி தொடர்ந்து எழுதியதால்
   கவிதைக்கும் உன்மீது காதல்.

* என் கனவில் நீ வருவதன்
   சூட்சமம் என்ன?
   நானும் கடைபிடிக்க வேண்டும்
   அதே சூட்சமத்தை.

* நான் எழுதும் இந்த பேனா இவ்வரிகளை
   உனக்காக dedicate செய்வதாக கொஞ்சுகிறது.

* ரதியிடம் மன்மதனை விலக்கி வைக்கச்
   சொல்லியிருக்கிறேன்! அவன் என்னை
   தனிமையில் தவிக்க விட்டுள்ளதால்...

* இந்திரனை சிறையிட்டு விட்டேன்
   முன்னெச்சரிக்கையாய்...
   இருந்தும் இரவில் நடமாடாதே.
   எனக்கு சோமனைப் பற்றி நன்கு தெரியும்.
   அவன் இன்னும் பாக்கி.

* சக்தி உக்கிரத்தில் இருக்கிறாள்
   சிவன் உன் பின்னால் வந்ததால்.

* கங்கையில் இறங்கி விடாதே,
   அவளுக்கு உன்மேல் தனிக்கோபம்.

திருமகள் திருமாளின் இதயத்தை
   கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறாள், பயத்தில்.

என்னுள் பயம் தீவிரமடைகிறது
   கடவுள்களும் போட்டிக்கு வந்துள்ளதால்...

* இருப்பினும்,
   நான் உனக்காக பிறந்தவன் அல்லவோ!
  போட்டிகள் என்னைத் தளர்த்தி விடுமா என்ன?
    

No comments:

Post a Comment