யோசிக்கிறேன் இன்று
…உன்னைப் பற்றி
…
…யோசிக்கிறேன் இன்று
…உன் நிலையில் இருந்து
…
…வருந்துகிறேன் நான்
… தூங்காத இரவுகளுக்கான பழியை
… உன்மீது போட்டதை நினைத்து…
என்னைப் பிடிக்கவில்லை என்றதும்
… உன்னைத் திட்டியதை, மிரட்டியதை நினைத்து
…
… நீ காதலித்திருந்தால் இச்சமூகம்
… உன்மீது போடவிருந்திருக்கும் பழிகளை நினைத்து
…
… உன் மகிழ்ச்சியை கெடுத்துவிடுவேனோ!? என்ற பதைப்பிலேயே
… நீ நாட்களை நகர்த்தியதை நினைத்து
…
… உனக்கிருப்பதும் மனது தான்
… என்பதை உணராததை நினைத்து
…
… இன்னும் என்னென்னவெல்லாமாகவோ நினைத்து
…
…ஆனால் வருத்தப்படவில்லை
…நீ என்னை காதலிக்காததை நினைத்து.