31/10/2012

இல்லை.

* என்ன செய்தோம்?
   எதற்கு வாழ்கிறோம்?

* கேள்விகளுக்கு இன்று வரை
   விடையில்லை.

 * உணர்ச்சிகளை என்றோ
   அடகு வைக்கவில்லை
   மொத்தமாய் விற்று விட்டோம்.

* வாரி வழங்குகிறோம்
   வசைகளை மட்டும்.

* இவற்றிற் கிடையில் எட்டணா
   போடும் பெருங்கொடையாளியை
   குனிந்து மனமார வணங்கினாள்
   மவுன்ட் ரோட்டில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரி.