* என்ன செய்தோம்?
எதற்கு வாழ்கிறோம்?
* கேள்விகளுக்கு இன்று வரை
விடையில்லை.
* உணர்ச்சிகளை என்றோ
அடகு வைக்கவில்லை
மொத்தமாய் விற்று விட்டோம்.
* வாரி வழங்குகிறோம்
வசைகளை மட்டும்.
* இவற்றிற் கிடையில் எட்டணா
போடும் பெருங்கொடையாளியை
குனிந்து மனமார வணங்கினாள்
மவுன்ட் ரோட்டில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரி.