* புரிந்தது எனக்கு
காதல் புரியாது என.
* நீ கோவிலை சுற்றினாய்
நானோ!? உன்னை.
* உன் கொலுசுகளுக்கு ஏன் இந்த மகிழ்ச்சி?
உன்னுடனேயே இருப்பதாலோ!!!
* வஞ்சம் வைத்துள்ளேன்
உன் புத்தகங்கள் மீது
என்னை பற்ற வேண்டிய கரங்கள்
அவைகளை பற்றியிருப்பதால்.
* உன்னைப் பற்றி தொடர்ந்து எழுதியதால்
கவிதைக்கும் உன்மீது காதல்.
* என் கனவில் நீ வருவதன்
சூட்சமம் என்ன?
நானும் கடைபிடிக்க வேண்டும்
அதே சூட்சமத்தை.
* நான் எழுதும் இந்த பேனா இவ்வரிகளை
உனக்காக dedicate செய்வதாக கொஞ்சுகிறது.
* ரதியிடம் மன்மதனை விலக்கி வைக்கச்
சொல்லியிருக்கிறேன்! அவன் என்னை
தனிமையில் தவிக்க விட்டுள்ளதால்...
* இந்திரனை சிறையிட்டு விட்டேன்
முன்னெச்சரிக்கையாய்...
இருந்தும் இரவில் நடமாடாதே.
எனக்கு சோமனைப் பற்றி நன்கு தெரியும்.
அவன் இன்னும் பாக்கி.
* சக்தி உக்கிரத்தில் இருக்கிறாள்
சிவன் உன் பின்னால் வந்ததால்.
* கங்கையில் இறங்கி விடாதே,
அவளுக்கு உன்மேல் தனிக்கோபம்.
* திருமகள் திருமாளின் இதயத்தை
கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறாள், பயத்தில்.
* என்னுள் பயம் தீவிரமடைகிறது
கடவுள்களும் போட்டிக்கு வந்துள்ளதால்...
* இருப்பினும்,
நான் உனக்காக பிறந்தவன் அல்லவோ!
போட்டிகள் என்னைத் தளர்த்தி விடுமா என்ன?
காதல் புரியாது என.
* நீ கோவிலை சுற்றினாய்
நானோ!? உன்னை.
* உன் கொலுசுகளுக்கு ஏன் இந்த மகிழ்ச்சி?
உன்னுடனேயே இருப்பதாலோ!!!
* வஞ்சம் வைத்துள்ளேன்
உன் புத்தகங்கள் மீது
என்னை பற்ற வேண்டிய கரங்கள்
அவைகளை பற்றியிருப்பதால்.
* உன்னைப் பற்றி தொடர்ந்து எழுதியதால்
கவிதைக்கும் உன்மீது காதல்.
* என் கனவில் நீ வருவதன்
சூட்சமம் என்ன?
நானும் கடைபிடிக்க வேண்டும்
அதே சூட்சமத்தை.
* நான் எழுதும் இந்த பேனா இவ்வரிகளை
உனக்காக dedicate செய்வதாக கொஞ்சுகிறது.
* ரதியிடம் மன்மதனை விலக்கி வைக்கச்
சொல்லியிருக்கிறேன்! அவன் என்னை
தனிமையில் தவிக்க விட்டுள்ளதால்...
* இந்திரனை சிறையிட்டு விட்டேன்
முன்னெச்சரிக்கையாய்...
இருந்தும் இரவில் நடமாடாதே.
எனக்கு சோமனைப் பற்றி நன்கு தெரியும்.
அவன் இன்னும் பாக்கி.
* சக்தி உக்கிரத்தில் இருக்கிறாள்
சிவன் உன் பின்னால் வந்ததால்.
* கங்கையில் இறங்கி விடாதே,
அவளுக்கு உன்மேல் தனிக்கோபம்.
* திருமகள் திருமாளின் இதயத்தை
கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறாள், பயத்தில்.
* என்னுள் பயம் தீவிரமடைகிறது
கடவுள்களும் போட்டிக்கு வந்துள்ளதால்...
* இருப்பினும்,
நான் உனக்காக பிறந்தவன் அல்லவோ!
போட்டிகள் என்னைத் தளர்த்தி விடுமா என்ன?