19/08/2012

அந்திக் கிறுக்கல்கள்



*  என்னை போ என்கிறாய்.
     எங்கு சென்றாலும் என்னுடனே வருகிறாய்.


*  என் வாழ்வாய் நீயே என்றாய்.
    இங்கு நானோ நீயே!


*   சினிமா பார்க்கலாம் என்றேன்.
     அதெல்லாம் முடியாது என்றாய்.
     இப்பொழுது எனக்கும் சேர்த்து சினிமா பார்க்கிறாய்.


*  கடற்கரையில் காற்று வாங்க சென்றோம்.
    காற்றோ உன்னை வாங்க கெஞ்சியது.


*  சரியா... என்றேன்.
    ம்ம்... என்றாய்.
    இன்னும் புரியாமல் தவிக்கிறேன் நான்.


*   வீதியில் நடக்கையில் விரல் கோர்க்க       முயன்றேன்....
     சிணுங்கிக்கொண்டே விலக்கினாய்.
     கடைசியில் இதழ் கோர்த்து பிரிந்தாய்,
     யாருமறியாமல்.