10/07/2012

காத்திருப்பேன் இன்னுமொரு நாள்...



* அது ஒரு அந்திப்பொழுது...

* கண்களில் படபடப்பு
  நாசியில் குறுகுறுப்பு

* இரண்டொரு நிமிடம் எனினும்
  யுகங்கள் கடந்த எண்ணம்

* அவள் விரல்களிடையில் ஓய்வை
  விரும்பும் எனது விரல்கள்

* அவள் கால் தடங்களில் எல்லாம்
  கால் பதிக்க துடிக்கும் இதயம்

* மனசுக்குள் மின்சாரம்
  கால்களுக்கு கீழ் ஆகாயம்

* அழகாய் நடந்து வந்தாள்
  ஆனந்தத்தின் எல்லை தந்தாள்

* அவள் பார்வை பட்டதும்
  உணர் விழந்தேன் இயற்கையாய்

* மரத்தின் அடியில்
  மரமாய் நின்றேன்

* கருதியது கூறும் முன்
  கடந்து சென்று விட்டாள்

* கவிதைகள் வடித்தும்
  கவிஞன் ஆகா நான்....
  அவள் பார்வை பட்டும்
  அமரன் ஆகா நான்.....
  காத்திருப்பேன் இன்னுமொரு நாள்
  என் காதலை சொல்ல.

நிழற்குடையில்...



* நிழற்குடையில் நிற்கிறேன்
  நிழலுக்கல்ல; பேருந்திற்கு

* பேருந்துகள் கடந்தன
  பயணிகளை மாற்றிக்கொண்டு

* கடந்து சென்ற பேருந்தில்:
  படியில் பயணம் - நொடியில் மரணம்

* கவனிக்கப்படவில்லை, ஒரு நொடி கூட....

நாம் பெற்ற பரிசு



 வாகனங்களின் இரைச்சல்

 மக்களின் அவசரம்

 வானுயர பறக்கும் புழுதி


 செழித்துக் கொழிக்கும் மாசுபாடு

 இன்னும் பல சொல்லலாம்

 வாழ்வின் அடுத்த நிலை முயற்சிக்கு

 நாம் பெற்ற பரிசுகளாய்!

மனிதத்தை மறக்க பழகுகிறேன்.


மதிப்பெண்களுக்காக வதைக்கப்படும் மாணவர்கள்

…சக்கையாய் பிழியப்படும் சுரங்க பணியாளர்கள்

…தர்மம் அய்யா என அடிவயிற்றில் இருந்து கதறும் பிச்சைக்காரன்

…சாலையில் கிடக்கும் அடிபட்ட மனிதன்

…இறைச்சிக்காக கொல்லப்படும் பசுக்களின் கதறல்

…அந்த மூன்று நாட்களிலும் ஓய்வின்றி உழைக்கும் பெண்கள்

…வேலைக்காரியிடம் குழந்தை - கழிப்பறையிலே தாய்ப்பால் என வேதனையுடன் பணி செய்யும் பெண்கள்

…இந்த ரணங்களில் இருந்து விடுபட
…மற்றவர்களைப் போல் நானும்
…மனிதத்தை மறக்க பழகுகிறேன்.

அந்திப்பொழுது.....


* அந்திப்பொழுது....

* அவள் என்னை சந்தித்த பொழுது

* வசந்தம் வந்து என்னை
  தழுவிய பொழுது