* அது ஒரு அந்திப்பொழுது...
* கண்களில் படபடப்பு
நாசியில் குறுகுறுப்பு
* இரண்டொரு நிமிடம் எனினும்
யுகங்கள் கடந்த எண்ணம்
* அவள் விரல்களிடையில் ஓய்வை
விரும்பும் எனது விரல்கள்
* அவள் கால் தடங்களில் எல்லாம்
கால் பதிக்க துடிக்கும் இதயம்
* மனசுக்குள் மின்சாரம்
கால்களுக்கு கீழ் ஆகாயம்
* அழகாய் நடந்து வந்தாள்
ஆனந்தத்தின் எல்லை தந்தாள்
* அவள் பார்வை பட்டதும்
உணர் விழந்தேன் இயற்கையாய்
* மரத்தின் அடியில்
மரமாய் நின்றேன்
* கருதியது கூறும் முன்
கடந்து சென்று விட்டாள்
* கவிதைகள் வடித்தும்
கவிஞன் ஆகா நான்....
அவள் பார்வை பட்டும்
அமரன் ஆகா நான்.....
காத்திருப்பேன் இன்னுமொரு நாள்
என் காதலை சொல்ல.